இப்ப போறேன் ஆனா திரும்பி.. வர மாட்டேனு சொன்னேன்.. டாப்சிலிப் காட்டில் விடப்பட்ட கோவை சிறுத்தை
கோவை : கோவை 5 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்ட நிலையில், அதனை டாப்சிலிப் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர்.
Recommended Video
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் சிறுத்தை ஒன்று வெளியேறியது. சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நுழைந்தது.
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் அந்த சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

பொதுமக்கள் அச்சம்
பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுத்தை சுற்றித்திரியும் இடங்களில் வலைகளை வைத்தும் கூண்டுகள் மூலமும் சிறுத்தையை பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

சிறுத்தை சிக்கியது
ஐந்து நாட்கள் போராடியபோதும் கூண்டில் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. சிறுத்தையை சுட்டுப்பிடிக்க விருப்பம் இல்லாத நிலையில் அதனை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் காத்திருந்தனர். கடும் பட்டினியோடு சுற்றித்திரிந்த சிறுத்தை உணவு தேடி குடோனில் இருந்து வெளியேற முயன்றபோது நேற்று நள்ளிரவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

மக்கள் நிம்மதி
கூண்டிற்குள் இறைச்சி தண்ணீர் சேவல் உள்ளிட்டவை வைத்ததால் அவற்றை உண்ண வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியதை அடுத்து கூண்டை வனத்துறையினர் அடைத்தனர். கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விட முடிவு செய்யப்பட்டது.

டாப்சிலிப் வனப்பகுதி
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் வனத்துறைக்கு சொந்தமான வாகனம் மூலம் சிறுத்தையுடன் இருந்த கூண்டு கோவை அருகே உள்ள டாப் சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுத்தை இருந்த கூண்டை வனத்துறையினர் திறந்து விட்டனர் கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்ட அந்த சிறுத்தை சீறிப்பாய்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடியது இதைப் பதிவு செய்துள்ள வனத்துறையினர் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications