அதிபர் தேர்தல்: இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மாறுபட்ட வாக்குச் சீட்டு..வாக்களிப்பது எப்படி?
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போது புதிய முறையில் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியா உள்பட 13 சர்வதேச பார்வையாளர்கள் இந்த தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கூட்டணி கட்சி வேட்பாளர்
இந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

35 வேட்பாளர்கள்
தமிழர்கள் சார்பில் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. அதுபோல் கருணா வரதராஜ பெருமாள், ராஜபக்சேவை ஆதரிக்கிறார். இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிபர் களத்தில் 35 வேட்பாளர்கள் இருப்பதால் வாக்களிக்கும் முறை மற்ற நாடுகளை காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளது.

புதிய நீளத்தில் வாக்குச் சீட்டு
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 26 அங்குல நீளத்திற்கு வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியின் அகரவரிசைப்படி பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

50 சதவீதம்
வாக்கு எண்ணிக்கையின் போது முதல் விருப்பமாக வாக்காளர்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேட்பாளரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் விருப்பமாக தேர்வு செய்திருந்தால் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர்
ஒரு வேளை 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால் இன்ஸ்டன்ட் ரன் ஆப் முறை பின்பற்றப்படும். இதில் முதல் இரு இடங்களை பிடித்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இவர்களை 2-வது, 3-வது விருப்பமாக எத்தனை பேர் தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கில் எடுத்து அவை இருவரின் வாக்குகளுடன் சேர்த்து அதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications