இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. மே 17ல் விவாதம்!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
இலங்கையில் மிக கடுமையான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிற்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி கடுமையாக போராட்டம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராஜபக்சே ராஜினாமா
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை பொதுஜன முன்னணி கூட்டணி இவருக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர்
நேற்று புதிய பிரதமர் பதவி ஏற்ற நிலையில் இன்னொரு பக்கம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மே 17ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிபரை நீக்குவது என்பது சிக்கலான வேலை ஆகும். இது தொடர்பான தீர்மானம் உருவாக்கப்பட்டு, அது சபாநாயகரிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதை அவர் அதிபரின் ஒப்புதலுக்கு அளிப்பார். அதிபர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும். பின்னர் அதன் மீது வாக்கெடுப்பு நடக்கும். நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதன்பின் நாடாளுமன்றம் அதிபரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்ட்டுக்கு அனுப்பும். அதில் கோர்ட் முடிவு எடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒப்புதல்
பின்னர் மீண்டும் அதே தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வரும். அதில் மீண்டும் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் பின்பே அங்கு அதிபர் நீக்கப்பட முடியும். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிபராக பதவி விலகினால்தான் உண்டு. அங்கு ஏற்கனவே தங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்று இலங்கை பொதுஜன மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 225 மொத்த எம்பிக்களில் 160 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக கூறுகிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவது சந்தேகமாகவே உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications