இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. மே 17ல் விவாதம்!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
இலங்கையில் மிக கடுமையான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிற்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி கடுமையாக போராட்டம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராஜபக்சே ராஜினாமா
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை பொதுஜன முன்னணி கூட்டணி இவருக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர்
நேற்று புதிய பிரதமர் பதவி ஏற்ற நிலையில் இன்னொரு பக்கம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மே 17ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிபரை நீக்குவது என்பது சிக்கலான வேலை ஆகும். இது தொடர்பான தீர்மானம் உருவாக்கப்பட்டு, அது சபாநாயகரிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதை அவர் அதிபரின் ஒப்புதலுக்கு அளிப்பார். அதிபர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும். பின்னர் அதன் மீது வாக்கெடுப்பு நடக்கும். நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதன்பின் நாடாளுமன்றம் அதிபரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்ட்டுக்கு அனுப்பும். அதில் கோர்ட் முடிவு எடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒப்புதல்
பின்னர் மீண்டும் அதே தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வரும். அதில் மீண்டும் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் பின்பே அங்கு அதிபர் நீக்கப்பட முடியும். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிபராக பதவி விலகினால்தான் உண்டு. அங்கு ஏற்கனவே தங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்று இலங்கை பொதுஜன மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 225 மொத்த எம்பிக்களில் 160 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக கூறுகிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவது சந்தேகமாகவே உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications