நெருங்கும் ஜூலை 9-இலங்கையில் வெடிக்கப் போகும் பூகம்பம் எது?பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமாவா?
கொழும்பு: இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி அரசியலில் பூகம்பம் நிகழ்வதால் இந்த மாதம் 9-ந் தேதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே; ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் ஏப்ரல் 9-ந் தேதி போராட தொடங்கினர். கோத்தா கோ கம என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமம் கட்டமைக்கப்பட்டு கோத்தபாயவுக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது.

மகிந்த ராஜபக்சே
இதனையடுத்து தொடர் போராட்டங்கள் நடந்தன. கடந்த மே 9-ந் தேதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மகிந்த ராஜபக்சே. அத்துடன் போராடிய பொதுமக்களை தாக்குவதற்கு குண்டர்களை ஏவிவிட்டார் மகிந்த ராஜபக்சே. ஆனால் இந்த முயற்சி பூமராங்கானது. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள், சொத்துகள் மே 9-ந் தேதி தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே தப்பி ஓடினார்.

பசில் ராஜபக்சே
பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்படும் இலங்கை மக்களின் கோபம் தணியவும் இல்லை. அதேநேரத்தில் இலங்கை அரசியல்வாதிகளின் பதவி ஆசையும் போய்விடவில்லை. பிரதமர் பதவிக்காக இலவு காத்திருந்த பசில் ராஜபக்சே, ஜூன் 9-ந் தேதி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது மனைவி அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

ரணில் விக்கிரமசிங்கே
இதனால் வரும் 9-ந் தேதி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகுவாரா? ரணில் விக்கிரமசிங்கே பதவியை இழப்பாரா? என்கிற விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் வேலைத் திட்டம் வெற்றி பெற்றால் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்கிரமசிங்கே பேசியிருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றத்தில், நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். எதிர்க்கட்சி தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் நாங்கள் இராஜினாமா செய்ய தயார் என்றார். இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications