Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள்

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலுக்கு வந்த பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நான்கு மாதங்களுக்கு பிறகு கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

Recommended Video

    திருச்செந்தூர்: கடற்கரைக்கு அனுமதி... சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் மக்கள்... புனித நீராடி சாமி தரிசனம்!

    கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு கேளிக்கைப் பூங்காக்கள், திரையரங்குகள், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்ல ஏப்ரல் 20 முதல் அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்ததில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆனது கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    Corona relaxations: Thiruchendur, Rameswaram people enthusiastically visited the holy bath

    இந்த நிலையில் கடலில் புனித நீராட அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தது. இதில் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    ரமேஸ்வரம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடுவதற்கு தடை நீடிக்கிறது. இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்

    கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகள் படி இன்று தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர் சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியது,

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகள் படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் சுற்றுலா மையங்கள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் முன்கூட்டியே நேற்று மாலையே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை முடிந்ததாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று மாலை முதல் கன்னியாகுமரிக்கு வருகை தர தொடங்கினார்கள். இன்று காலையிலும் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், பீச் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் வருகை தந்து உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். இரண்டு மாதமாக காலமாக வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+