மாட்டிக்கிட்டீங்களே ஏட்டையா! அதிமுக கூட்டத்துக்கு கரண்ட் ஆட்டைய போட்ட ர.ர.க்கள்! போட்டோவால் சர்ச்சை!
விருத்தாச்சலம் : விருத்தாச்சலம் அருகே நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என அதிமுக தலைமை, மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக அமைப்பு மாவட்டங்களில் வசதிக்கேற்றார் போல் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பிரம்மாண்டமாகவும் சிலர் எளிமையாகவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்கூட்டம்
இந்நிலையில் தான் விருத்தாச்சலம் அருகே நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விருத்தாச்சலம் அருகே மங்கலம்பேட்டையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் தலைமையில் நடந்தது.

மின் திருட்டு
இந்த நிகழ்ச்சிக்காக பொதுக்கூட்ட மேடை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில், மேடை மட்டுமல்லாது அப்பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் பகல் போல காட்சியளித்தது. இந்நிலையில் தான் அங்கு மின்சாரம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கூட்ட நடத்திவதற்காக நூற்றுக்கணக்கான ட்யூட் லைட்டுகள், போக்கஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில்,அதற்கு தேவைப்படும் மின்சாரத்தை திருடப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

போட்டோக்கள் பரவல்
கூட்டம் நடந்த தெருவில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பதியில் இருந்து திருட்டுத்தனமாக நிகழ்ச்சிக்கு ஒளி ஒலி ஏற்பாடு செய்திருந்த நபர்கள் வயர் மூலம் எடுத்து பயன்படுத்தியதாக தற்போது புகைப்படமும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பல நிர்வாகிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவல் கிடைத்த நிலையில், ஒலி அமைப்பாளரை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது,

கடும் கண்டனம்
ஆனாலும் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டது மட்டும் நிறுத்தப்படவில்லை. இதனையடுத்து அப்பகுதி திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு கமெண்ட் செய்த அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு திருட்டு மின்சாரம் பயன்படுத்திய அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications