Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சேனே.. மாணவியின் உடலை பெற்ற தாய் கதறல்.. பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவியின் உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேளையில், ‛‛படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சேனே.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டேனே'' எனக்கூறி அவரது தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Recommended Video

    Kallakurichi மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது *Tamilnadu

    கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார்.

    கடந்த 13ம் தேதி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினார்.

    மறு பிரேத பரிசோதனை

    மறு பிரேத பரிசோதனை

    மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரதே பரிசோதனை முடிவடைந்த பிறகும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்ததோடு சட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவியின் உடல் மறுபிரதேச பிரசோதனை செய்யப்பட்டது.

    பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

    பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

    இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று காலை 6.55 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்று கொண்டனர். கதறி அழுது கண்ணீருடன் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் உடல் இறுதி சடங்குக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனையில் இருந்து சொந்தஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் செல்கின்றனர்.

     கதறிய தாய்

    கதறிய தாய்

    முன்னதாக மாணவியின் உடலை வாங்கி கொள்ள அவரது தாய் செல்வி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதார். அப்போது அவர், ‛‛இனி உன்ன எப்போமா பார்ப்பேன்.. உன்னை கண்ணும், கருத்துமா வளர்த்தேனே... படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சி வளர்த்தேனே.. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டேனே.. என் தங்கமே.. எப்படி எங்களை விட்டு பிரிஞ்சி போன.. தயவுசெய்து என் மகளை நல்ல முறையில் அடக்கம் பண்ண விடுங்க.. என் மகள என்னால மறக்க முடியல.. நல்ல மார்க் எடுத்து வந்திருந்தா நான் சந்தேப்பட்டு இருப்பேனே.. இப்போது என்னால ஜீரணிக்கவே முடியலேயே'' என கதறி அழுதது அனைவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

     கண்காணிப்பு தீவிரம்

    கண்காணிப்பு தீவிரம்

    இதற்கிடையே பெரியநெசலூர் கிராமத்துக்கு புறப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர் நுழைவு பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாணவியின் இறுதிசடங்கில் வெளியூர் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்கு மாலையில் இறுதி சடங்குகளை நிறைவேற்ற கூறியுள்ளதால் பெரியநெசலூர் கிராமத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+