எங்க கொண்டு விட்டுருக்க பார்த்தியா..கடலூரில் கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு ஏற்பட்ட கதியை பாருங்க
கடலூர்: கடலூரில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டி வந்த லாரி டிரைவர் தவறுதலாக ஒருவழிப்பாதைக்குள் வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கடலூர் பேருந்து நிலையத்திற்குள் லாரியை கொண்டு சென்ற ஓட்டுநர் சரியான பாதையில் திரும்பிச்சென்றார்.
முன்பெல்லாம் வழி தெரியாத ஊருக்கு போவதென்றால் அவ்வழியாக வருபவர்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டியிருக்கும்.
ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் பயணம் செய்வதென்றால் சரியான வழியை கண்டுபிடித்து போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், இப்போதெல்லாம் இந்த அளவுக்கு சிரமப்பட வேண்டியது இல்லை.

கூகுள் மேப்
கூகுள் மேப்ஸ்சில் நாம் செல்ல வேண்டிய இடத்தை பதிவிட்டால் போதும்.. ஒரு நொடிக்குள் நாம் எப்படி போக வேண்டும்...போய் சேருவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்...போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதா? என்பது வரை நம் உள்ளங்கைக்குள் தகவலை கொண்டு வந்து விடும். இதனால், எந்த சிரமும் இன்றி எளிதாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடிகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கு கூட சரியாக ரூட்டை போட்டு கூகுள் மேப்ஸ் காட்டி விடும்.

பராமரிப்பின்றி மூடி கிடந்தாலும்
தொலைதூரங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், சரக்கு லாரி வாகன ஓட்டிகள் என பலருக்கும் முன்பை ஒப்பிடும் போது இப்போது வழி தேடி அலையும் கஷ்டம் பெரிதாக இல்லை. ஆனாலும் சில நேரங்களில் இந்த கூகுள் மேப்ஸ்கள் தவறான பாதையை காட்டி விடுவதாகவும் சாலைகள் பராமரிப்பின்றி மூடி கிடந்தாலும் அந்த வழியாகவும் அனுப்பி வைத்து விடுவதாகவும் அவ்வப்போது சில விமர்சனங்களும் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

செல்லும் வழியில் குழப்பம்
கடலூரில் கூகுள் மேப்ஸ் பார்த்து ஓட்டியதால் தவறான பாதைக்கு சென்று விட்டதாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- ஈரோடு மாவடம் சங்கரி பகுதியை சேர்ந்தவர் முருகன். டிரைவரான இவர் அங்குள்ள சிப்காட்டில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக பெங்களூருவுக்கு ரசாயன மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியில் புறப்பட்டு இருக்கிறார். செல்லும் வழியில் சற்று குழப்பம் ஏற்பட்டதால் கூகுள் மேப்சில் வழியை தேடியிருக்கிறார்.

இங்கு ஏன் வந்தீர்கள்...
அதில் காட்டிய வழியில் முருகன் லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது முதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரியில் வந்த முருகன், ஒருவழிப்பாதையான லாரன்ஸ் சாலைக்கு வந்துவிட்டார். அங்கு ரயில்வே சுரங்கப்பாதை இருந்ததால், இதற்கு மேல் செல்ல முடியாது என்று திகைத்து வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டார். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களும், இங்கு கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இங்கு ஏன் வந்தீர்கள்... அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் சென்று திரும்பி சென்று விடுங்கள் என அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இப்படி சுற்ற வைத்து விட்டதே
இதன்படி, முருகனும் லாரியை பேருந்து நிலையத்திற்குள் எடுத்துச்சென்றார். திடீரென பேருந்து நிலையத்தில் லாரி வருகிறதே என்று அங்கிருந்த பயணிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பேருந்து நிலையத்தில் லாரிய திருப்பி மீண்டும் சாரியான ரூட்டை பிடித்து சென்று விட்டார். கூகுள் மேப்சை நம்பி வந்ததற்கு இப்படி சுற்ற வைத்து விட்டதே என்று லாரி ஒட்டுநர் முருகன் புலம்பாத குறைதான்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications