Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் மெய்யநாதனுக்கு என்னாச்சு? டாக்டர் குழுவுடன் சென்னைக்கு பறந்த கார்.. மருத்துவமனையில் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

கடலூர் : சென்னைக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதால் அவர் தனி கார் மூலம் மருத்துவக் குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்தார்.

ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில்

தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நாகப்பட்டினத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கௌதமனை வரவேற்கும் நிகழ்ச்சி, பேட்மிண்டன் அகாடமி திடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் நேற்று பங்கேற்றார்.

ரயிலில் பயணித்த அமைச்சர்

ரயிலில் பயணித்த அமைச்சர்

பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறி சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

2 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

2 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

இதையடுத்து, நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மெய்யநாதன் அங்கு சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் அவர் உடல்நிலை சீரடைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சென்னை விரைந்த அமைச்சர்

சென்னை விரைந்த அமைச்சர்

இந்நிலையில், கடலூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவக் குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு, ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+