ராணுவத்தையே கூட்டி வந்தாலும் பூட்டு.. எல்லா கேட்டையும் பூட்டிடுவோம் பாத்துக்கோங்க! ஆவேசமான அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

கடலூர் : கடலூரில் என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரிய பூட்டு ஒன்றை காட்டி பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்," இது எச்சரிக்கை பூட்டு தான்.. அடுத்து உண்மையான பூட்டை எடுத்து வந்து எல்லா கேட்டையும் பூட்டி விட்டுடுவோம் பாத்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்தார்.

கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முக்கிய நிர்வாகிகள், பாமக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்வேலு என்.எல்.சி

நெல்வேலு என்.எல்.சி

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி முழக்கங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்," 64 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணையும் மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தன்னூத்தாக இருந்த கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 8000 அடிக்கும் கீழே சென்று விட்டது.

 என்எல்சி நிறுவனம்

என்எல்சி நிறுவனம்

என்எல்சி நிறுவனம் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சியதால் தற்போது கடலூர் மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றி விட்டது. இதற்கு முழு காரணமும் என்எல்சி தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்எல்சி நிறுவனம் வேலை வழங்கவில்லை. இதனால் அவரது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.

பூட்டு போடுவோம்

பூட்டு போடுவோம்

இதுவரை நான் எந்த நிறுவனத்தையும் மூட வேண்டும் என்று சொல்லியதே இல்லை. ஆனால் என்எல்சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ராணுவத்தையே கூட்டி வந்தாலும் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம் நிலம் எடுக்க வந்தால் முடியாது என கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு படி மண்ணைக் கூட எடுக்க முடியாது என பேசினார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அப்போது மாதிரி பூட்டு ஒன்றை பாமக தொண்டர்கள் கூட்டத்தின் இடையே எடுத்து வந்தனர் அதனை பார்த்த அன்புமணி ராமதாஸ் இது எச்சரிக்கை போட்டு தான் அடுத்து உண்மையான பூட்டை எடுத்து வந்து எல்லா கேட்டையும் பூட்டி விடுவோம் பார்த்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+