2024-ல் எம்.பி.சீட்டுக்கு குறி! களமிறங்கிய அமைச்சர் மகன் கதிரவன்! களப்பணியை தொடங்கிய ஆதரவாளர்கள்!
கடலூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன்.
தற்போதைய கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு மீண்டும் 100% சீட் கிடையாது என்பதால், வாரிசை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சிட்டிங் எம்.பி.ரமேஷின் செயல்பாடுகளால் கடலூர் மக்களவை தொகுதியில் திமுகவுக்கு கெட்டபெயர் உள்ள நிலையில், அதனை துடைத்தெறியும் பணிகளை ஆதரவாளர்கள் மூலம் ஆரம்பித்துள்ளார் கதிரவன்.

அமைச்சர் மகன்
வேளாண்மைத் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் மாவட்ட அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார். இதுவரை தந்தை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு உதவியாகவும், வியூக வகுப்பாளராகவும் திரை மறைவில் பணியாற்றி வந்த இவர் இப்போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளராக உயர்ந்துள்ளார். இதன் பின்னணியில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

ரமேஷ் மீது சர்ச்சை
கடலூர் சிட்டிங் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இன்னும் பல சர்ச்சைகள் இருப்பதால் அவருக்கு அடுத்த தேர்தலில் 100% சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் தொகுதிக்குள்ளும் ரமேஷுக்கு நல்ல பெயர் இல்லை. இவை அனைத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இப்போதே மக்கள் மத்தியில் தனது களப்பணிகளால் கவனம் ஈர்க்கும் வேலையை தொடங்கியுள்ளார் கதிரவன்.

உதயநிதி ஆசி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பரிபூரண ஆசி கதிரவனுக்கு உண்டு என்பதால், 2024-ல் இவர் தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என சத்தியம் செய்யாத குறையாக அவரது ஆதரவாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆகியோரது வாரிசுகள் தற்போது நாடளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கதிரவனும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தை -மகன்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சற்று முன்கோபம் உடையவர். இடம் பொருள் தெரியாமல் யாரையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். ஆனால் அவரது மகன் கதிரவன் சற்று உஷாரானவர். கட்சியில் பொறுப்பு கிடைப்பதற்கு முன்னரே தனக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தை கடலூர் திமுகவில் உருவாக்கி வைத்திருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications