வேலைவாய்ப்பு.. 5ஜி பயன்படுத்தி புது செயலிகள் உருவாக்க 100 நவீன லேப்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய செயலிகள் உருவாக்க 500 நவீன லேப்கள் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
டெல்லி: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவைகளை பயன்படுத்தி புதிய செயலிகளை உருவாக்க நாட்டில் 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து துறையை இந்த செயலிகள் மேம்படுத்த உள்ளது.

இந்தியாவில் அனைத்து சேவைகளும் மேம்பட்டாதக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியா கடந்த ஆண்டு புதிய மைல்கல்லை எட்டியது. இந்தியாவை பொறுத்தமட்டில் 4ஜி சேவை வரை மட்டுமே இருந்த நிலையில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. தற்போது 100க்கும் அதிகமான நகரங்களில் 5ஜி பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது இந்தியாவில் 5ஜி சேவைகளை பயன்படுத்தி உயர்மட்ட பொறியியல் நிறுவனங்களில் பல்வேறு செயலிகள் உருவாக்கும் வகையிலான 100 நவீன லேப்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள், வணிக மாதிரிகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த செயலிகள் கல்வி, விவசாயம், போக்குவரத்து அமைப்புகள், சுகாதாரம் போன்ற பயன்பாடுகளை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications