பெகாசஸ் உளவு வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு! விசாரணை அறிக்கைக்கு காலஅவகாசம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் 29 செல்போன்களை விசாரணை குழு ஆய்வு செய்துள்ள நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் டெல்லி நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையானது. அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஒட்டுகேட்பு விவகாரம்
அதாவது பிரான்ஸின் பர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தை கண்டுபிடித்தன. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பல அரசியல்வாதிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விசாரணை குழு
இதையடுத்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கக் கோரி பல்வேறு பொதுநல வழக்குகள் பதிவாகின. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு ஒட்டுகேட்கப்பட்டுள்ளதா, தரவுகள் திருடப்பட்டுள்ளதா, இதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஒருவேளை உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிக்காட்டியது.

29 செல்போன்கள் ஆய்வு
அதன்படி தற்போது வரை விசாரணை குழு 29 செல்போன்களை ஆய்வு செய்துள்ளது. இதற்கிடையே வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை குழு தரப்பில் இதுவரை இந்த வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பிற துறை நிபுணர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஜூன் 20 வரை அவகாசம்
இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, விசாரணைக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை வெளியானால் இந்திய அரசியலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications