பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா.. டெல்லி மருத்துவமனையில் பலியான சோகம்
டெல்லி: பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் அவருக்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனிக்காமல் இறந்துவிட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 500 நெருங்கியது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள கலாவதி சரண் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது.
அங்கு அக்குழந்தைக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அக் குழந்தை இன்று உயிரிழந்துவிட்டது. மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் 8 வயது குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
அறிகுறி இல்லாமலேயே 186 பேருக்கு கொரோனா பாதிப்பு- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஷாக் தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் 21 மாத குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.