விஸ்தாரா விமானத்தின் காக்பிட் அறையில் விசில் சத்தம்.. நடுவானில் ஏற்பட்ட திடீர் பதற்றம்!
டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விஸ்தாரா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென காக்பிட் அறையில் விசில் சத்தம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு என ஏராளமான விமானங்களை இயக்கி வருகிறது.
விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான யுகே 951 என்ற போயிங் 737 விமானம் மும்பை - டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்று மும்பைக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

காக்பிட் அறையில் விசில் சத்தம்
விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானியின் காக்பிட் அறையின் வலது பக்கத்தில் இருந்து விசில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இதைக்கவனித்த விமானி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உரிய அனுமதி கிடைத்ததும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த தொழில்நுட்ப குழுவினர் விமானத்தை ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வுகளில் கோளாறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் தொடர்ந்து வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதா? என்று ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் தவிப்பு
விமானம் பாதிவழி சென்று விட்டு மீண்டும் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் மும்பைக்கு செல்ல இருந்த பயணிகளும் உரிய நேரத்தில் மும்பை செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டதால் சங்கடம் அடைந்தனர்.

மாற்று விமானம் மூலம்
இது தொடர்பாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டெல்லியில் இருந்து விமானம் டேக் ஆஃப் செய்த சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கவனித்த விமானி, டெல்லிக்கே மீண்டும் விமானத்தை திருப்ப முடிவு செய்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications