இரும்பு தடிகளுக்கு பதில் மலர்கள்... டெல்லி போலீசுக்கு விவசாயிகளின் பதில்
டெல்லி : விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசார் கையில் எடுத்துள்ள இரும்பு தடிகளுக்கு பதிலாக மலர் செடிகளை, காசிபூர் போராட்ட களத்தில் விவசாயிகள் நட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 26 அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. இதனைடுத்து, டெல்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு தடிகளை டெல்லி போலீசார் அமைத்துள்ளனர்.

நாளை நாடு தழுவிய சாலை மறியலை விவசாயிகள் நடத்த உள்ள நிலையில், காசிபூர் போராட்ட களங்களில் விவசாயிகள் மலர் செடிகளை நட்டுள்ளனர். இது பற்றி பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், விவசாயிகளுக்காக இரும்பு தடிகளையும், முள் வேலைகளையும் போலீசார் அமைத்துள்ளனர். ஆனால் நாங்கள் மலர் செடிகளை அவர்களுக்காக நட்டு வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி விவசாயிகள் சங்க மீடியா பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் கூறுகையில், அடையாள நிமித்தமாகவே எல்லையில் இந்த மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. அதே போன்று டில்லி- தர்பர் திகாரா சாலையில் வழி நெடுகிழும் பெரிய அளவில் அழகிய மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இது டெல்லிக்கு அழகு, மனம் தருவருவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக டிராக்டர்களில் மண் குவியல்கள் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்கள் அருகே போடப்பட்டுள்ளன. மலர்கள் தனியாக கொண்டு வரப்பட்டு, பிறகு நடப்பட்டன. விவசாயிகளின் இந்த நடவடிக்கைள் குறித்து சமூக வலைதளங்களில், ஹாஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications