Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னுரையால் சர்ச்சை.. ‛அம்பேத்கரும் மோடியும்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா! விபரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இசையமைப்பாளரான இளையராஜா அணிந்துரை எழுதி சர்ச்சையான‛அம்பேத்கரும்-மோடியும்' என்ற நூல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இதில் இளையராஜா பங்கேற்காத நிலையில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் சார்பில் ‛ அம்பேத்கரும் மோடியும்' என்ற தலைப்பில் சீர்த்திருத்தவாதிகள் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் எழுதியது.

இந்த புத்தகத்துக்கு இசையமைப்பாளரான இசைஞானி இளைராஜா முன்னுரை எழுதி இருந்தார். இதுதொடர்பான விபரங்கள் வெளியாகி பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

முன்னுரை எழுதிய இளையராஜா

முன்னுரை எழுதிய இளையராஜா

அதாவது அந்த புத்தகத்தில் இளையராஜா, ‛‛பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு செய்துள்ளது'' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவை மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் மோடி அம்பேத்கர் ஒப்பீடு

பிரதமர் மோடி அம்பேத்கர் ஒப்பீடு

அம்பேத்கர் இருந்தால் இதனை நினைத்து பெருமைப்பட்டிருப்பார் என குறிப்பிட்டு இருந்தார். அதோடு மட்டுமின்றி அம்பேத்கரும், பிரதமர் மோடியும் ஏழ்மை, ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள். இவருவருமே அதனை ஒழிக்க பாடுபட்டனர் என பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இருந்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதனை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். அரசியல் பதவிக்காக இளையராஜா இவ்வாறு ஒப்பீடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். மேலும் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கூறினர். ஆனால் இளையராஜா தனது கருத்தை ஒருபோதும் வாபஸ் பெறமாட்டேன் என உறுதியாக கூறினார்.

பங்கேற்காத இளையராஜா

பங்கேற்காத இளையராஜா

இது நடந்த அடுத்த சில வாரங்களில் இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் ‛அம்பேத்கரும் மோடியும்' என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் மத்திய ஒலிபரப்புத்துறை சார்பில் இன்று நடந்தது. விழாவை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கு ‛அம்பேத்கரும் மோடியும்' எனும் நூலை பெற்று கொண்டார்.

குஷ்பு பங்கேற்பு

குஷ்பு பங்கேற்பு

இந்த விழாவில் இசையமைப்பாளரும், எம்பியுமான இளையராஜா பங்கேற்கவில்லை. விழாவில் மத்திய அமைச்சர் அனுராக், மத்திய இணையமைச்சர் எல் முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+