இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தற்போது தலைமை தளபதியாக உள்ள பதௌரியா விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தியா விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா விமானப் படையில் தற்போது தலைமை தளபதியாக உள்ளவர் ராகேஷ் குமார் சிங் பதௌரியா. இவர் கடந்த 2019 செப்டம்பர் 30 முதல் விமானப் படையில் தலைமை தளபதியாக இருந்து வருகிறார்.

Air Marshal VR Chaudhari To Be New Chief Of Air Staff

இவரது பதவிக் காலம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்தியா விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார். ஏர் மார்ஷல் சவுத்ரி கடந்த 1982 முதல் விமானப் படையில் சேவை புரிந்து வருகிறார். தற்போது வரை பணிக் காலத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள அவர், பரம் விசிஷ்ட சேவா, அதி விசிஷ்ட சேவா மற்றும் வாயு சேனா ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

ஏர் மார்ஷல் சவுத்ரி சுமார் 3,800 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர் மிக் -29 ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லுநராக உள்ள அவர், மேற்கு விமானப்படைத் தளபதியாகவும் இருந்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+