நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்.. இந்தி பிரச்சனைக்கு மத்தியில் மோடி பேச்சு
டெல்லி: ‛‛நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, நீதித்துறையுடன் சாமானியர்களை தொடர்பு கொள்ள வைக்கும்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் நேற்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39வது தைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை வகித்து பேசினார்.
இதையடுத்து இன்று விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளூர் மொழியை ஊக்குவிக்கணும்
பொதுமக்கள் எளிமையான முறையில் சட்டத்தை புரிந்து கொள்ள வசதியாக நாடாளுமன்றம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டால் அவர்கள் நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இதுபற்றி அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும் உள்ளூர் மொழிகளை நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி குறிப்பிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இதற்கு நீண்டகாலம் எடுத்தாலும் கூட இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் அவர்கள் நீதித்துறையுடன் தங்களை தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.

எளிய முறையில் நீதி
மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை நம்மால் நமது தாய்மொழியில் வழங்க முடியாதா?. சில மாநிலங்கள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர். இந்த முறையை பின்பற்றலாம். மேலும் டிஜிட்டல் முறையையும் பின்பற்ற வேண்டும். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் எளிய முறையில் நீதி கிடைக்க வேண்டும்

புதிய அமைப்புகள்
இதற்காக நீதித்துறையில் புதிய அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2015ம் ஆண்டில் 1800 சட்டங்கள் தேவையின்றி இருப்பதாக கண்டறிந்தோம். இதில் மத்திய அரசு 1,450 சட்டங்களை நீக்கியுள்ளது. மாநில அரசு வெறும் 75 சட்டங்களை மட்டும் ரத்து செய்துள்ளன. இதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
Recommended Video

என்வி ரமணா பேச்சு
இந்த மாநாட்டில் இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணாவும் உரையாற்றினார். அவர் கூறுகையில், "நமது கடமையை நிறைவேற்றும் போது, லக்ஷ்மண் ரேகா கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுநல வழக்குகள் என்பது ஒருகாலத்தில் பொதுநலன் சார்ந்து இருந்தது. தற்போது இது தனிப்பட்ட நலன் வழக்குகளாக மாறியுள்ளன. இது தனிப்பட்ட நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன'' என கவலை தெரிவித்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications