நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியம் அளித்த பட்டியலை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்!
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பட்டியலை மத்திய அரசு கடந்த 25 ஆம் தேதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப்பட்டியலில் மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பால் பெயரும் இடம் பெற்றிருந்தாக கூறப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பு சிபாரிசு செய்பவர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது.
சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும் வற்புறுத்திய 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

நீதிபதிகள் பதவி உயர்வு
ஆனால், இந்த உத்தரவை பின்பற்ற மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் கொலிஜியம் சிபாரிசுகளுக்கு மத்திய அரசு வேண்டும் என்றே கால தாதமதம் செய்வதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலிஜியம் அனுப்பிய கோப்புகள்
10 பேர் அடங்கிய விருப்ப பட்டியலலுடன் கொலிஜியம் அனுப்பிய கோப்புகளை கடந்த 25 ஆம் தேதி மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் தலைமை நீதிபதியான பிஎன் கிர்பால் மகனுமாகிய சவுரப் கிர்பால் பெயரும் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. கொலிஜியம் மீண்டும் வலியுறுத்திய சில பெயர்களையும் மத்திய அரசு திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றம் அதிருப்தி
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கிர்பால், தான் கே என்பதாலே தனது நியமனம் மறுக்கப்படுவதாக கூறியிருந்தார். 2017 ஆம் ஆண்டு முதலே கிர்பாலுக்கு நீதிபதியாக பதவி உயர்வு வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற இது தொடர்பான வழக்கு ஒன்றின் போது, மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

எல்லை மீறி செயல்படுகிறது
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அளித்த பெயர்களில் சிலவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால், பணிமுதிர்வு அடிபடுகிறது. கொலிஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருத வேண்டுமே தவிர ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு நீதித்துறை பணிகளை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. இது போன்ற கிடப்பில் போட்டுக்கொண்டு மத்திய அரசு எல்லை மீறி செயல்படுகிறது.

முறையாக பின்பற்ற வேண்டும்
இந்த விவகாரத்தில் நீதிமன்றே முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளி விட வேண்டாம். சட்டம் இருக்கும் போது அதை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் ஆலோசனை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications