அடேங்கப்பா.. கார்பரேட் நிறுவனங்களில் 80% நன்கொடையை பெற்ற பாஜக.. திமுக,அதிமுகவுக்கு எவ்வளவு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில் ஒட்டுமொத்த தேர்தல் நன்கொடையில் பாஜக மட்டும் சுமார் 80%, அதாவது 271.5 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் தொடங்கி கார்பரேட் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் தேர்தல் நிதி கொடுப்பது வழக்கமான ஒரு நிகழ்வு தான்.

அதிலும் தேர்தல் காலங்களில் இந்த நிதி அளிப்பது பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு மிக அதிகம்

பாஜகவுக்கு மிக அதிகம்

electoral trust-கள் மூலம் பெறப்படும் நன்கொடைகளில் பாஜக வேறு எந்த கட்சிகளையும்விட அதிகபட்சமாக 276.45 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. குறிப்பாக ப்ருடெண்ட் அறக்கட்டளையில் இருந்து நிறுவனத்திடம் இருந்து ரூ .217.75 கோடி, ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .45.95 கோடி, ஏ பி பொதுத் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .9 கோடி, சமாஜ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .3.75 கோடியை பாஜக பெற்றுள்ளது.

ரூ 58 கோடியைப் பெற்ற காங்கிரஸ்

ரூ 58 கோடியைப் பெற்ற காங்கிரஸ்

மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் 58 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. அதில் ப்ருடெண்ட் அறக்கட்டளையில் இருந்து ரூ. 31 கோடியும், ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ. 25 கோடியும், சமாஜ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ. 2 கோடியும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வருமானம் 2019-20 நிதியாண்டில் 682 கோடி ரூபாயாக உள்ளது. இது 2018-29ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 25% குறைவாகும்.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

அதேபோல மாநில கட்சிகள் எனப் பார்க்கும்போது, டிஆர்எஸ் ரூ 130 கோடி, சிவசேனா ரூ 111 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 92 கோடி, அதிமுக ரூ 89 கோடி, திமுக ரூ 64 கோடி, ஆம்ஆத்மி ரூ 49 கோடியை நன்ககொடையாக பெற்றுள்ளன. தேர்தல் பாண்டுகள் மூலமும் மாநிலக் கட்சிகள் அதிகளவில் நன்கொடை பெற்றுள்ளன. டிஆர்எஸ் ரூ 89 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 74 கோடி, திமுக ரூ 45 கோடி, சிவசேனா ரூ 40 கோடி, ஆம்ஆத்மி ரூ 17 கோடியை, அதிமுக ரூ 6.05 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன.

யாருக்குச் சென்றது அந்த ரூ 3 கோடி

யாருக்குச் சென்றது அந்த ரூ 3 கோடி

அதில் பிர்லா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ 3 கோடி எந்த அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை ப்ருடெண்ட் அறக்கட்டளை வெளியிடவில்லை. அந்தத் தொகை தேர்தல் பாண்டுகள் மூலம் பெறப்பட்டவை என்பதால் எந்த அரசியல் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிடத் தேவையில்லை என ப்ருடெண்ட் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நன்கொடை அளிக்கும் முறை

நன்கொடை அளிக்கும் முறை

பொதுவாக, இந்தியாவில் கார்பரேட் பெரு நிறுவனங்கள் ப்ருடெண்ட் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமே அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும். அரசியல் கட்சிகளும் செக், டிடி உள்ளிட்டவை மூலமே பணத்தைப் பெற்றுக் கொள்ளும். அதேபோல தேர்தல் பாண்டுகள் மூலம் ஒருவர் அரசியல் கட்சிகளுககு நிதி அளிக்கலாம். தேர்தல் பாண்டுகளில் யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை வெளியிட வேண்டியது கட்டாயம், ஆனால் யாருக்கு அளிக்கிறார்கள், அதாவது எந்த அரசியல் கட்சி அந்த நிதியைப் பெறுகிறது என்பதை வெயிட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+