"புல்லட் ப்ரூஃப் காரில் பாத யாத்திரை போகட்டா!" டெல்லி போலீஸ் விளக்கம்.. நக்கலடித்த ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 'புல்லட் ப்ரூஃப்'காரிலா பாத யாத்திரை மேற்கொள்ள முடியும்? இல்லை., இதற்கு முன்பு நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர்கள் அப்படிதான் செய்தார்களா? எனக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ராகுல் காந்தி, பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என டெல்லி காவல்துறை கூறியுள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடைப்பயணம் இந்தியாவின் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகவும், இதிலிருந்து தாம் நிறையக் கற்றுக்கொண்டதாகவும் ராகுல் கூறினார்.

"டெல்லி போலீஸார் மெத்தனம்"

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நடைப்பயணம் 100 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டெல்லிக்குள் இந்த யாத்திரை நுழைந்தது. இந்நிலையில், ராகுலின் நடைப்பயணத்திற்கு டெல்லி போலீஸார் முறையாகப் பாதுகாப்பு வழங்குவதில்லை என காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், "பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் டெல்லி போலீஸார் மெத்தனம் காட்டி வருகிறார்கள். ராகுலைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமாகவும் அவர்கள் நிற்பதில்லை. 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொண்டிருக்கும் ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல்"

இதனிடையே, இந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்குமாறு டெல்லி போலீஸாருக்கும், சிஆர்பிஎப்-க்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு டெல்லி காவல்துறையும், சிஆர்பிஎப்-ம் தனித்தனியாக பதில் அளித்திருந்தன. அதில், ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர் அடிக்கடி பாதுகாப்பு விதிகளை மீறுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு வளையமாக போலீஸார் நின்றிருந்த போதிலும், அதை உடைத்துக் கொண்டு அவர் செல்கிறார் எனவும் டெல்லி போலீஸ் சார்பில் கூறப்பட்டது.

'புல்லட் ப்ரூஃப்' காரிலா?

'புல்லட் ப்ரூஃப்' காரிலா?

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராகுல், "நான் மேற்கொண்டிருப்பது நடைப்பயணம். பொதுவெளியில் நடந்து செல்வதுதான் நடைப்பயணம். பாதுகாப்பு விதிகளை நான் மீறுவதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 'புல்லட் ப்ரூஃப்' காரிலா பாதயாத்திரை மேற்கொள்ள முடியும்.

"நிறைய கற்றுக்கொண்டேன்"

நான் அப்படி செல்வதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது. பாஜக தலைவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ முறை பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன காரிலா சென்றார்கள்? எனது இந்த நடைப்பயணம் இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்த நடைப்பயணம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. பாஜக மீது பெரும்பாலான மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதையும் இந்த நடைப்பயணத்தில்தான் தெரிந்துகொண்டேன்" என ராகுல் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+