பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக காரணம் திடீர் மேக கூட்டம்: வெளியான விசாரணை அறிக்கை
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய விமானப்படை அமைத்த முப்படை விசாரணை குழு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
விபத்துக்கு, சதிவேலை காரணம் இல்லை என்று முதல்கட்ட அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகமூட்டம்தான் விபத்துக்கு காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது இந்த அறிக்கை.
கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி, குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் இந்திய விமானப்படையின் Mi-17V5 வகை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 14 பேர் அதில் பயணம் செய்தனர்.

முப்படை விசாரணை
இந்த விபத்தில், பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முப்படை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட விசாரணையின் முடிவுகளை அந்த குழு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்துள்ளது.

தீவிர விசாரணை
ட்ரை-சர்வீசஸ் கோர்ட் ஆஃப் என்கொய்ரி தனது விசாரணையின்போது விமான டேட்டா ரெக்கார்டர்கள் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர்களை ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம்
வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் விமானியின் கவனம் நிலைகுலைந்தது. இதுதான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

வானிலை மோசம்
இயந்திரக் கோளாறு, நாசவேலை அல்லது விமானியின் அலட்சியம் ஆகியவை விபத்துக்கான காரணங்களா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது. ஆனால் இதில் எதுவும் காரணம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் திடீரென ஹெலிகாப்டர் பறந்த பாதையில் குறுக்கே வந்ததன், விளைவுதான் இந்த விபத்து. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications