ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிக்காக ஐநாவில் "போராடிய" சீனா! பின்னணியில் இவ்வளவு மேட்டரா? யார் இந்த ரவூப்?
டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை சீனா கோரியிருந்த நிலையில், ரவூப் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியா பட்டியலிடத் தொடங்கியுள்ளது.

ரவூப்-ஐ சர்வதேச பயங்கரவாதியாகவும், அவர் மீது உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில் சீனா மட்டும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அப்துல் ரவூப் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும், அவரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கவும் இந்தியா மற்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாகிய, 15 நாடுகளில் 14 நாடுகள் ஒப்புதல் அளித்தது. ஆனால் சீனா மட்டும் இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை கேட்டு தீர்மானத்தை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை இந்திய தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ரவூப் பாகிஸ்தானில் பஹவல்பூர் மற்றும் கராச்சியில் என நான்கு பகுதியில் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறார். மேலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் துணைத் தலைவராகவும், நிதி மற்றும் நிர்வாகத் தலைவராகவும், அவர் குழுவின் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாளராக உள்ளார். மட்டுமல்லாது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பொதுக் கவுன்சில் உருப்பினராகவும் உள்ளார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் மற்றும் 2003ல் பாகிஸ்தானில் அப்போதைய அதிபர் முஷாரப் மீதான கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் மசூத் அசார் ஆவார். இவர் ரவூப் அசாரின் சகோதரர் ஆவார். இந்த சம்பவங்களுக்க பின்னர் பாகிஸ்தான் பாதுக்காப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ரகசிய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் செயல்பாட்டில் இருந்த காலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக நீடித்து வந்தார். பின்னர் இவரைத் தொடர்ந்து, இவரது சகோதரர் ரவூப் அசார் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர். அதேபோல ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைப்பு கடந்த 2001ல் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பத்தின் மீதான NIA குற்றப்பத்திரிக்கையில் ரவூப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications