கொரோனா 2ஆம் அலையால் ஆபத்தில் சிறார்கள்.. முழு தரவுகளை திரட்ட அதிகாரிகளுக்கு.. பிரதமர் அறிவுறுத்தல்
டெல்லி: உருமாறிய கொரோனா வைரசால் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் சிறார்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் உரையாடினார். அப்போது கொரோனா 2ஆம் அலையில் இளைஞர்களும் சிறார்களும் அதிக ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக இளைஞர்கள், சிறார்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள், சிறார்கள் மத்தியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது குறித்த தரவுகளைச் சேகரிக்குமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தடுப்பூசி வீணாக்கப்படுவது பற்றிப் பேசிய அவர், "தடுப்பூசி வீணடிக்கப்படுவது இங்கு பெரும் பிரச்சினை உள்ளது. தடுப்பூசி வீணாகாமல் இருப்பதை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகாரிகள் அனைவரும் இதை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
வீணாக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒருவர் ஆபத்தில் தள்ளப்படுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். எனவே, தடுப்பூசி வீணடிப்பதை நிறுத்துவது மிக முக்கியமானது. இதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வருவதால் அதைத் தடுக்க நமது அணுகுமுறைகளும் அதற்கு ஏற்றவாறு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒரே நாடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications