பிரியங்கா பேட்டி ஓராண்டு பழையது...ராகுல் காந்திதான் தலைவர்...பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!!
டெல்லி: ''காந்தி குடும்பத்தில் இல்லாமல் கட்சியில் இருந்து வேறு யாராவது காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாக செய்தி வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி, தற்போது பாஜக தூண்டுதலில் செய்தியாக வெளி வந்து கொண்டு இருக்கிறது என்று அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி 2019, ஜூலை ஒன்றாம் தேதி அளித்திருந்த பேட்டியில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை நான் ஏற்க மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கு மரியாதை அளிக்கிறோம். அதேபோல், குடும்ப உறுப்பினர்கள் யாரும் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க கூடாது என்று கூறி இருந்ததையும் வரவேற்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டியை அவர் சமீபத்தில் கொடுத்தது போல் செய்தியாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு இன்று பதில் அளித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, ''கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா காந்தி அளித்திருந்த பேட்டியை பாஜக பின்னணியில் ஊடகங்கள் திடீரென குதித்து செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இன்றைய அரசியலில் மோடி-ஷா இருவரின் போக்கை எதிர்த்து பயமின்று முன்னணியில் போரிடுவதுதான் எங்களது குறிக்கோள்.
அதிகாரத்தை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல், காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பம் பணியாற்றி வருகிறது. இதற்கு உதாரணமாக சோனியா காந்தி இருக்கிறார். கட்சிக்கு சேவை மட்டுமே செய்து அதிகாரத்தை தியாகம் செய்துள்ளார். 2019ல் ராகுல் காந்தி நம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கட்சிக்கு தொடர்ந்து ராகுல் காந்தி சோர்வில்லாமல் உழைத்து வருகிறார். தொடர்ந்து ஆளும்கட்சியுடன் தனது வாதத்தை முன் வைத்து போராடி வருகிறார். தனது கருத்துக்கள் மூலம் மோடி அரசின் தவறுகளை எடுத்து வைத்து பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். இந்த அச்சமற்ற, சமரசம் செய்து கொள்ள முடியாத தைரியத்தைதான் இன்று நாடே ஏதிர்பார்க்கிறது. காங்கிரஸ் தொண்டர்களும் மதிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் சில மாதங்களில் பிரியங்கா காந்தி பேட்டி அளித்து இருந்தார். தற்போது கட்சிக்கு பிரபல முகம் தேவைப்படுகிறது என்ற விவாதம் எழும்போது, பிரியங்காவின் பேட்டியும் செய்தியாகி பரபரப்பை அதிகரித்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications