குடியுரிமை சட்ட போராட்டத்துக்கு எதிரான ராணுவ தளபதி பேச்சு.. கடும் சர்ச்சை! எதிர்க்கட்சிகள் கொதிப்பு
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியது கடும் சர்ச்சையாகி வருகிறது. ஒரு ராணுவ தளபதி எப்படி அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொதிக்கின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த வன்முறையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். வன்முறை தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவர் டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தலைமை என்பது எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவது, நீங்கள் முன்னேற்றத்திற்கான விஷயங்களை நோக்கி செல்லும் போது, இதையே எல்லோரும் பின்பற்றுவார்கள்

வன்முறை பாதை
மக்களை சரியான திசையில் வழிநடத்துகிறவர்களே தலைவர்கள். மக்களை தவறான திசைகளில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. இதற்கு சாட்சியாக இருப்பது பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள். அவர்களை நம் நகரங்களிலும் தீ மற்றும் வன்முறைகளைச் செய்வதற்கு வழிநடத்துகிறார்கள். அப்படி நடத்துகிறவர்கள் தலைவர்களே அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள்
ராணுவ தளபதியின் இந்த பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நாட்டின் ராணுவ தளபதி எப்படி அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.

ஜனநாயகத்துக்கு எதிரானது
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலாப்பா இது பற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ராணுவத் தலைவர் பிபின் ராவத் குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக பேசுவது முற்றிலும் அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. இன்று அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ராணுவத் தளபதியை அனுமதித்தால், நாளை ராணுவமே அரசை கையகப்படுத்துவதற்கான முயற்சிக்கு அனுமதித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

ஒருமைப்பாடு
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், தலைமை என்பது ஒருவரின் அலுவலகத்தின் வரம்புகளை அறிந்து கொள்வது இது குடிமக்களின் மேலாதிக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் நீங்கள் தலைமை தாங்கும் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பது பற்றியது" என்று பிபின் ராவத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

குடிமகனாக உரிமை
இருப்பினும், ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளது. நாட்டின் குடிமகனாக பேசுவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக கூறுகிறார்கள். பிபின் ராவத் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்க உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications