Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டிய ஜோதிமணி? ஓம்பிர்லாவின் அறைக்குள் பெரும் பரபரப்பு.. காங்கிரஸ் எம்பிக்களின் ஆக்ரோஷ வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம்பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாக பேசியதோடு, பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்பட 20 முதல் 25 எம்பிக்கள் மிரட்டியதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மொத்தம் 9 வினாடிகள் உள்ளது.

congress-mps-entered-speaker-om-birla-chamber-abused-him-and-threatened-pm-modi-says-kiren-rijiju

அதில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது அலுவலக அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை சுற்றி காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளன. ஜோதிமணி உள்பட பல எம்பிக்கள் விரல்களை நீட்டி வாதம் செய்கின்றனர்.

சபாநாயகர் அறையில்..

இந்த வீடியோ பற்றி கிரண் ரிஜுஜு, ‛‛சபாநாயகர் அறைக்குள் நுழைந்த 20 முதல் 25 காங்கிரஸ் எம்பிக்கள் சட்டவிரோதமாக வீடியோ எடுத்துள்ளனர். சபாநாயகரை அவதூறாக திட்டி ள்ளனர். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எங்களின் கட்சி வாதம் மற்றும் விவாதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. உடல்ரீதியிலான மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை'' என்று கூறியுள்ளார்.

வீடியோ வெளியீடு

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பாஜகவினர், காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வீடியோ வெளியிட்ட பிறகு சம்பவம் பற்றி கிரண் ரிஜுஜு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

பிரியங்கா காந்தி - கேசி வேணுகோபால்

‛‛20 முதல் 25 எம்பிக்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை திட்டினர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் அங்கிருந்து அதனை ஊக்குவித்தனர். நானும் அங்கு இருந்தேன். காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்தேன். சபாநாயகர் சாப்ட்டான நபர். அதேவேளையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடியவர்''என்று கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி மறுப்பு

ஆனால் இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛நாங்கள் யாரையும் திட்டவில்லை. அவதூறாக பேசவில்லை. ஒன்று அல்லது 2 எம்பிக்கள் கோபமாகினர். அதனை அவர்கள் வெளிப்படுத்தினர். நானும் அவர்களை ஊக்குவித்ததாக கிரண் ரிஜுஜு கூறியுள்ளார். அது பொய். நான் ஒன்றும் செய்யவில்லை. அமைதியாக தான் இருந்தேன்'' என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

தற்போது நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கி உள்ளது. ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பேச அனுமதி கொடுக்கவில்லை என்று இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தொடர்ந்து லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேச இருந்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் ரத்து செய்யப்பட்டது.

அப்போது ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டனர். அதுதொடர்பான வீடியோவை கிரண் ரிஜுஜு நேற்று வெளியிட்ட நிலையில் இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அறையில் நடந்த சம்பவ வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் எம்பிக்கள் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+