திணறும் மகாராஷ்டிரா.. கேரளாவிலும் தீவிரம்.. இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா.. 109 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 33 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    பேருந்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி prank செய்த பெண்

    கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. தெற்காசியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொடர்பாக இன்று பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் சார்க் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கேரளாவில் தொடங்கிய வைரஸ் தாக்குதல் தற்போது மகாராஷ்டிராவில் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. தென்னிந்தியாவில் தமிழகம் மட்டுமே இந்த வைரஸை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    இந்த கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் டெல்லியில் 7 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 14 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் இத்தாலியை சேர்ந்தவர்கள். கேரளாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா

    தெலுங்கானா

    ராஜஸ்தானில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். லடாக்கில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்.

    எங்கு அதிகம்

    எங்கு அதிகம்

    காஷ்மீரில் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப்பில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடாகாவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 14 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    மொத்தம் எவ்வளவு

    மொத்தம் எவ்வளவு

    மொத்தமாக இந்தியாவில் 107 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் இருந்து இதுவரை இந்திய அழைத்து வரப்பட்ட யாருக்கும் கொரோனா இல்லை. அதேபோல் தமிழகத்திலும் யாருக்கும் புதிதாக கொரோனா அறிகுறி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கொரோனா தொடர்பாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+