டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவு.. ஐசியூவில் ஒருவர் அனுமதி
டெல்லி: டெல்லியில் நேற்று கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டவர்களில் 51 சுகாதார ஊழியர்களுக்கு சிறிய அளவில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் நேற்று இந்தியாவில் தொடங்கியது. முதல் நாளான நேற்று இந்தியா முழுவதும் கோவிட் -19 க்கு எதிராக 1,91,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16,755 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மருந்துக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மருந்துகளும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

டெல்லியில் தடுப்பூசி
இந்நிலையில் டெல்லியில் நேற்று கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டவர்களில் 51 சுகாதார ஊழியர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயக்கம்
உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்டுகிறது. ஆனால் சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு பெரும்பாலோனார் வீடு திரும்பிவிட்டனர்.

எங்கு பாதிப்பு
51 பேரில் இரண்டு பேர் டெல்லி சரக் மருத்துவமனையில் ஊசி போட்டவர்கள் என்றும் வடக்கு ரயில்வே மத்திய மருத்துவமனையில் இருந்து இரண்டு பேருககு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் கூறப்பபடுகிறது. டெல்லியின் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் தலா 11 பேர் பக்க விளைவை சந்தித்துள்ளனர். மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தலா ஆறு பேரும், மத்திய டெல்லி இரண்டு மற்றும் வட டெல்லியில் ஒருவருக்கும் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை
தெற்கு டெல்லியில் மட்டும் ஒருவருக்கு கொஞ்சம் பக்கவிளைவு அதிகமாகி மயக்கம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலரான அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தார். அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சுகாதார பணியாளர்கள்
டெல்லியில் கோவிட் -19 க்கு எதிராக 4,319 சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியார்கள் தடுப்பூசி போடப்பட்டதாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நேற்று 100க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள் தடுப்பூசி போடவில்லை. எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் மொத்தமே 32 சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டது, அதே நேரத்தில் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 42 பேர், டெல்லி புற்றுநோய் மருத்துவமனையில் 46 மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் 31 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications