Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கட்டிட இடிப்பு.. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பில்லையா? பாஜக, ஆம்ஆத்மியை விளாசிய ஜோதிமணி எம்பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் பாஜக, ஆம்ஆத்மி கட்சிகளை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் புல்டோசர்கள் கொண்டு ஏழை மக்களின் கடைகள், வீடுகளை பாஜக சூரையாடுவதாகவும், அதனை மறைமுகமாக ஆதரித்து ஆம்ஆத்மி வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் 'அனுமன் ஜெயந்தி' என கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஜஹாங்கிர்புரி பகுதியில் இருதரப்பு இடையே வன்முறை ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கைது எண்ணிக்கை அதிகரிப்பு

கைது எண்ணிக்கை அதிகரிப்பு


மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறையில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் கைது எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படும் என டெல்லி வடக்கு மாநகராட்சி கூறியது. இன்று காலையில் புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இந்த பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததால் சில மணிநேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தப்பட்டது. ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஜோதிமணி விமர்சனம்

ஜோதிமணி விமர்சனம்

இதற்கிடையே கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம் தொடர்பாக பாஜக, ஆம்ஆத்மியை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜகாங்கீர்புரி பகுதியின் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை நிறத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மதிக்காமல் தொடர்ந்த புல்டோசர்களை கொண்டு ஏழை மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூரையாடும் பாசிச பாஜக அரசின் போக்கு கண்டனத்துக்குரியது. இதை மறைமுகமாக ஆதரிக்கும் ஆத்ஆத்மி கட்சி மக்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு கூறியுள்ளார்.

Recommended Video

    இடிக்கப்பட்ட வீடுகள்.. Delhi-யில் நடந்தது என்ன? பரபர பின்னணி
    ராகுலுக்கு ரீட்விட்

    ராகுலுக்கு ரீட்விட்

    மேலும் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தியும் பாஜக அரசை விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ஒரு டுவிட்டையும் ஜோதிமணி ரீட்விட் செய்துள்ளார். அதில், ‛‛இது அரசியலமைப்பின் விழுமியங்ள் மீது நடத்தப்படும் தாக்குதல். இது ஏழைகள் மட்டும் சிறுபான்மையினரை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பாஜக இத்தகைய செயலில் ஈடுபடுவதை விட தங்களின் இதயத்தில் உள்ள வெறுப்புணர்வை கட்டாயம் அகற்ற வேண்டும் '' என ராகுல் காந்தி தெிரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+