இது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்!
டெல்லி: டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்றுதான் டெல்லியில் 3.2 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் டெல்லியில் இப்படி நிலநடுக்கம் ஏற்படவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக டெல்லியில் இப்படித்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மூன்று முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர் நடுக்கம்
ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

என்ன எச்சரிக்கை
இது தொடர்பாக வாதியா புவியியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் (Wadia Institute of Himalayan Geology) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் காலச்சந்த் சைன் பேட்டி அளித்துள்ளார். அதில் இப்படி சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஆபத்தானது. டெல்லியில் தொடர் அதிர்வுகள் புவி அடுக்கில் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் பெரிதாக மாறும். இதனால் டெல்லியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, என்று கூறியுள்ளார்.

பெரிதாக வரும்
அதேபோல் பூகம்ப ஆபத்து மதிப்பீட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஏ கே சுக்லா அளித்த பேட்டியில், டெல்லியில் அதிகமாக பூகம்பங்கள் ஏற்படுகிறது. இதன் ரிக்டர் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இது நல்ல செய்தி இல்லை. பொதுவாக ஒரு இடத்தில் பெரிய நிலநடுக்கம் வரும் என்றால் அதற்கு முன் சிறிய நிலநடுக்கம் பல வர வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நடக்கிறது என்று கூறியுள்ளார்.

எவ்வளவு பலம்
இதே கருத்தை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் சந்தன் கோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். 6- 6.5 ரிக்டர் அளவு வரை டெல்லியில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால இந்த நிலநடுக்கம் எப்போது தாக்கும், எந்த பகுதியில் எல்லாம் தாக்கும் என்று விவரங்கள் வெளியாகவில்லை. டெல்லியில் இதனால் முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிக சேதம் அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

விதிகளை பின்பற்றவில்லை
டெல்லியில் கட்டிடங்கள் எதுவும் பெரிதாக விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை. பல அடக்குமாடி கட்டிடங்களில் முறையாக விதிகள் பின்பற்றப்படவில்லை. இதனால் என்ணெவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. அரசு இப்போதே இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும். துரிதமாக அரசு செயல்பட்டு சேதங்களுக்கு எதிராக முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications