குலுங்கிய கட்டிடங்கள்! தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!
டெல்லி : நேபாளத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் போட்டி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சக்தி வாய்ந்த நில நடுக்கும் பதிவாகிவானது. பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமான நிலையில் இடுபாடுகளில் சிக்கிய 6 பொதுமக்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நேற்று முன் தினம் டெல்லியில் உணரப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகி இருக்கிறது. டெல்லி நொய்டா, குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு நிமிடத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தை போலவே டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் இது 5.4 பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் , வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications