2022-ன் தொடக்கத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த முடியும்: தேர்தல் ஆணையம் நம்பிக்கை
டெல்லி: 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளின் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சுஷீல் சந்திரா அளித்த பேட்டி:

பீகார், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கு மத்தியில்தான் தேர்தலை நடத்தினோம். கொரோனா 2-வது அலையால் ஒத்திவைக்கப்பட்ட சில லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்கள், சட்டசபை இடைத்தேர்தல்களும் கூட அண்மையில் நடத்தப்பட்டன. மேலும் சில மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்களும் கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் முடிவடைகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் மே இறுதியில் முடிவடைகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 14.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; பஞ்சாப் மாநிலத்தில் 2 கோடி வாக்காளர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 78.15 லட்சம் வாக்காலர்களும் உள்ளனர். மணிப்பூரில் 19.58 லட்சம் வாக்காளர்கள்; கோவாவில் 11.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 17.84 கோடி வாக்காளர்கள் இந்த 5 மாநில தேர்தல்களில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இந்த 5 மாநில சட்டசபைகளின் பதவி காலங்கள் முடிவடையும்போது தேர்தல்களை நடத்திய புதிய எம்.எல்.ஏக்களுக்கான வெற்றி சான்றிதழ்களை தேர்தல் ஆணையம் வழங்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 80,000 வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. பீகாரில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்டோர் வாக்குச் சீட்டை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 1,000 முதல் 1,500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications