தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா... ராஜினாமா... ஆசியன் வங்கி துணைத் தலைவராகிறார்!!
டெல்லி: தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா ராஜினாமா செய்துள்ளார். பிலிப்பைன்சில் இருக்கும் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் சமர்பித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு அசோக் லாவசா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரிய வரவில்லை. இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதியின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவரது நியமனம் குறித்து ஜூலை 15ஆம் தேதி ஆசியன் வளர்ச்சி வங்கி வெளியிட்டு இருந்த தகவலில், '' அசோக் லாவசாவுக்கு தனியார்-பொது நிறுவன கூட்டு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளில் நல்ல அனுபவம் உள்ளது'' என்று தெரிவித்து இருந்தது.
தற்போது இந்த வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பில் திவாகர் குப்தா இருக்கிறார். தனியார் வங்கி மற்றும் தனியார், பொது வங்கி செயல்பாடுகள் குறித்த பணிகளில் ஈடுபட்டு இருந்தார். இந்த வங்கியில் துணைத் தலைவர்களாக ஆறு பேர் இருப்பார்கள். ஒவ்வொருவரின் பதவிக் காலமும் மூன்று ஆண்டுகளாகும். மேலும் இந்தப் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
இன்றும் அசோக் லாவசாவுக்கு இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கிறது. தொடர்ந்து இந்த பதவியில் நீடித்து இருந்தால், 2022 அக்டோபர் மாதம் இவர் ஓய்வு பெறும்போது, தலைமை தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெறலாம். ஆனால், அதற்குள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவர் மீதும் தேர்தல் நன்னடத்தை மீறல் தொடர்பாக வந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சைக்குள்ளானார். தேர்தல் முடிந்த பின்னர் இவரது குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவரது மனைவி, மகன், சகோதரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர்கள் தங்களது மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018, ஜனவரி 23 ஆம் தேதி தேர்தல் கமிஷனராக லவாசா பொறுப்பேற்று இருந்தார். அரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2001-02 ஆம் ஆண்டுகளில் பொருளாதார விவகாரத்துறையில் இணை செயலாளராக ஆசியன் டிவலப்மென்ட் வங்கிக்கு பணியாற்றியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications