"ஆக்ஸிஜன் மரணங்கள்"... லிஸ்ட் போட்டு குறை சொன்ன பிரியங்கா... பாஜக விளக்கத்துக்கு
மத்திய அரசை பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார்
டெல்லி: கொரோனா தொற்று காலத்தில், உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாமல் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரித்தது... ஆக்சிஜனை கொண்டு செல்ல டேங்கர்கள் எதையும் ஏற்பாடு செய்யவுமில்லை.. அதிகாரக்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் அறிவுரையையும் அரசு புறக்கணித்தது.. ஆக்சிஜன் வழங்க எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை" என மத்திய அமைச்சரின் விளக்கத்துக்கு பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
இந்த முறை இந்தியாவில் 2வது தொற்றானது, படுமோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.. பெரியவர்களையும் விட்டு வைக்கவில்லை.. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
தொற்று பாதிப்பு அதிகமாகிவிட்டதால், நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் ஏராளமான உயிர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது பல மாநிலங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

கேள்வி
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில், இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.. "2வது அலையில் அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் பற்றாக்குறையால், நிறைய நோயாளிகள் ரோடுகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் இறந்தனரே.. அது உண்மையா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்..

இறப்பு விகிதம்
அதில், "கொரோனா தொற்று இறப்புகளை தெரிவிப்பதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.. அதன்படிதான், எல்லா மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொற்று பாதிப்புகள் மற்றும் மரணங்கள் குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தன.. அந்த வகையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எங்குமே யாருமே உயிரிழந்ததாக, மாநிலங்களோ, யூனியன் பிரதேசங்களோ தெரிவிக்கவில்லை' என்றார்.

விளக்கம்
அமைச்சர் இப்படி ஒரு விளக்கத்தை தந்ததுமே அது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.. விவாதங்கள் கிளம்பின.. விமர்சனங்கள் எழுந்தன.. சில மாநில அரசுகளும்கூட அமைச்சரின் பதிலை விமர்சித்தன.. இந்நிலையில்தான், அமைச்சரின் இந்த விளக்க பதிலை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்... இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

ஆக்சிஜன்
அதில், "ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு சொல்கிறது.. உயிரிழப்புகள் எதனால் ஏற்பட்டதென்றால், தொற்று காலத்தில் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் தேவை அதிகம் இருந்த நிலையில் அதைப் புறக்கணித்து விட்டு, அரசு ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் வரை அதிகரித்தது... ஆக்சிஜனை கொண்டு செல்ல டேங்கர்கள் எதையும் ஏற்பாடு செய்யவுமில்லை.. அதிகாரக்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் அறிவுரையையும் அரசு புறக்கணித்தது..

முன்னேற்பாடுகள்
ஆக்சிஜன் வழங்க எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.. ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி அமைப்புகளை அமைக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி உள்ளார். பிரியங்கா லிஸ்ட் போட்டு சொன்ன இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு என்ன பதிலளிக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications