தேர்தல் ஆணையர் விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிகார வரம்பிற்குள் நிற்குமாறு மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்
டெல்லி: தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திடம் அதிகார வரம்பிற்குள் இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இந்தியாவின் அரசு தலையீடு இன்று சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளின் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநில தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே.
இந்தியாவை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் மகத்தான இடத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையம். தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர் ராஜீவ் குமார்.

அருண் கோயல்
இவரை தொடர்ந்து அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் புதிய தேர்தல் ஆணையராக நியமித்து உள்ளது. இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

ஓய்வுபெற்றவுடன் பதவி
1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்துவர். நவம்பர் 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த அருண் கோயல் 6 வாரங்களுக்கு முன்பாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இவரது விருப்ப ஓய்வு கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் ஏற்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் ஒரு சார்பாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் கருத்து
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆற்றல்மிக்க ஒருவரை நாம் தேர்வு செய்ய வேண்டும். அவர் யாருக்கும் அடிபணியக்கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு தன்னை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு வலிமையானவராக இருந்த டி.என். சேஷன் போன்றவரே சரியாக இருப்பார்." என்றது.

கொலீஜியம் முறை
தேர்தல் ஆணையர் நியமனம் அரசியலமைப்பின் முறைப்படியே இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடரமணி வாதாடிய நிலையில், "தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு சரியில்லை என்று தெரிகிறது. ஆனால் அதில் மாற்றம் செய்தால் மத்திய அரசு அதை ஏற்காது என எங்களுக்கு தெரியும்." என்றது உச்சநீதிமன்றம்.

அதிகார வரம்பு
இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அருண் கோயல் மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையராக எதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று வினவியது. இதுகுறித்து பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது (Hold Mouth) என்று கூறி இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.

தேர்வு முறை என்ன?
இதனை கேட்ட உச்சநீதிமன்றம், "இது எந்த மாதிரியான புரிதல்? அருண் கோயலின் தகுதி பற்றி நாங்கள் கேட்கவில்லை. அவர் தேர்வு செய்யப்பட்ட விதத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அதாவது மத்திய சட்ட அமைச்சர் எதன் அடிப்படையில் 4 பெயர்களை பரிந்துரைக்கிறார்." என்றது. அதற்கு மத்திய அரசு பராமரித்து வரும் டேட்டாஸ்பேஸ் அடிப்படையில் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications