தேர்தல் ஆணையர் விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிகார வரம்பிற்குள் நிற்குமாறு மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்
டெல்லி: தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திடம் அதிகார வரம்பிற்குள் இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இந்தியாவின் அரசு தலையீடு இன்று சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளின் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநில தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே.
இந்தியாவை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் மகத்தான இடத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையம். தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர் ராஜீவ் குமார்.

அருண் கோயல்
இவரை தொடர்ந்து அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் புதிய தேர்தல் ஆணையராக நியமித்து உள்ளது. இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

ஓய்வுபெற்றவுடன் பதவி
1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்துவர். நவம்பர் 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த அருண் கோயல் 6 வாரங்களுக்கு முன்பாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இவரது விருப்ப ஓய்வு கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் ஏற்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் ஒரு சார்பாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் கருத்து
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆற்றல்மிக்க ஒருவரை நாம் தேர்வு செய்ய வேண்டும். அவர் யாருக்கும் அடிபணியக்கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு தன்னை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு வலிமையானவராக இருந்த டி.என். சேஷன் போன்றவரே சரியாக இருப்பார்." என்றது.

கொலீஜியம் முறை
தேர்தல் ஆணையர் நியமனம் அரசியலமைப்பின் முறைப்படியே இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடரமணி வாதாடிய நிலையில், "தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு சரியில்லை என்று தெரிகிறது. ஆனால் அதில் மாற்றம் செய்தால் மத்திய அரசு அதை ஏற்காது என எங்களுக்கு தெரியும்." என்றது உச்சநீதிமன்றம்.

அதிகார வரம்பு
இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அருண் கோயல் மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையராக எதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று வினவியது. இதுகுறித்து பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது (Hold Mouth) என்று கூறி இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.

தேர்வு முறை என்ன?
இதனை கேட்ட உச்சநீதிமன்றம், "இது எந்த மாதிரியான புரிதல்? அருண் கோயலின் தகுதி பற்றி நாங்கள் கேட்கவில்லை. அவர் தேர்வு செய்யப்பட்ட விதத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அதாவது மத்திய சட்ட அமைச்சர் எதன் அடிப்படையில் 4 பெயர்களை பரிந்துரைக்கிறார்." என்றது. அதற்கு மத்திய அரசு பராமரித்து வரும் டேட்டாஸ்பேஸ் அடிப்படையில் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
-
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications