Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2021ல் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் எவ்வளவு தெரியுமா.. அதிலும் போலி 2,000 தாள்கள் இத்தனையா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் 21 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 12 கோடி என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.

அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது.

 கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்கள் விவரம்

கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்கள் விவரம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக ரூ 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுக்கள் பயன்பாடு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கள்ள நோட்டுக்கள் புழக்கம் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்கள் விவரம் மற்றும் அதில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எத்தனை என்ற விவரம் வெளியாகியுள்ளது.

 60 சதவீத கள்ளநோட்டுகள்

60 சதவீத கள்ளநோட்டுகள்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டு 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் போலி 2 ஆயிரம் ருபாய் தாள்கள் மட்டும் ரூ.12.18 கோடியாகும். அதாவது கிட்டத்தட்ட 60 சதவீததத்திற்கும் மேலானவை 2 ஆயிரம் ரூபாய் தாள்களே ஆகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு ரூ.15.92 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக

2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக ரூ.15.498 கோடி போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. 2021 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்களில் 500 ரூபாய் தாள்கள் ரூ.6.6 கோடி மதிப்புக்கும், ரூ. 200 தாள்கள் 45 லட்சம் மதிப்புக்கும் கைப்பற்றப்பட்டது.

 2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகள்

அதிகபட்சமாக தமிழகத்தில் 5 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கேரளாவில் 1.8 கோடி மற்றும் ஆந்திராவில் 1 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளநோட்டுக்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே புதிதாக 2,000 ரூயாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக அரசு கூறும் நிலையில், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கள்ளநோட்டுகளில் அதிகம் அச்சிடப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+