அமைதி முக்கியம்.. லடாக்கில் அத்துமீற வேண்டாம்.. படைகளை வாபஸ் வாங்குங்கள்.. சீன தூதர் கோரிக்கை!
டெல்லி: துப்பாக்கி சுடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, இந்தியா எல்லையில் உடனடியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடந்த இந்திய - சீன அமைதி பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே நடந்த இந்த ஆலேசனை மூலம் எல்லையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
லடாக் மோதல் இப்போது முடிய வாய்ப்பில்லை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். எல்லையில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் இந்த அமைதி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

தூதர் என்ன சொன்னார்
இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, இந்தியா எல்லையில் உடனடியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய - சீன பிரச்சனை சுமுகமாக முடிய வேண்டும்.எல்லை பிரச்சனையில் இரண்டு நாடுகளும் வெல்ல வேண்டும். இரண்டு நாட்டு உறவு முன்னோக்கி செல்ல வேண்டும்.இரண்டு நாட்டு உறவு சரியான திசையில் பயணிப்பது அவசியம்.

இரண்டு நாடுகள்
இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மீட்டிங் நம்பிக்கை தருகிறது. 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தத்தை இவர்கள் செய்துள்ளனர். இதனால் எல்லையில் நிலைமை சரியாகும் என்று நம்புகிறேன். எல்லையில் அமைதி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை மிக முக்கியம். ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லையில் தொடர வேண்டும்.

ஏன் முக்கியம்
எல்லை பிரச்சனையில் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லையில் இந்தியா மோதலை தவிர்க்க வேண்டும்.எல்லையில் நிலைமை மோசமானால் உடனே பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டும். இந்தியாதான் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி அமைதியை கெடுத்தது.

எல்லை பிரச்சனை
எல்லையில் இந்தியா படைகளை குவிப்பதை நிறுத்த வேண்டும். எல்லையில் இந்தியா தவறாக ரோந்து பணிகளை செய்கிறது. இந்தியா எல்லையில் அத்துமீறும் வகையில் செய்யும் அனைத்து செயல்களையும் உடனே நிறுத்த வேண்டும். துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆபத்தான செயல்களை உடனே இந்தியா தவிர்க்க வேண்டும். எல்லையில் இருந்து இந்தியா உடனே படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications