இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம் - 391 பேர் மரணம்
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7,886 கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. 28 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவியது. கொத்துக் கொத்தாக மரணமடைந்தனர். ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் படிப்படியாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 21 வது நாளாக 10ஆயிரத்திற்கும் கீழே பதிவாகியுள்ளது.

7447 பேர் பாதிப்பு
இந்தியாவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 61 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது. கேராளாவில் 3404 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 877 பேரும் மேற்கு வங்கத்தில் 660 பேரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லியில் 85 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

7,886 பேர் குணமடைந்தனர்
கடந்த 24 மணிநேரத்தில் 7,886 கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது. நாடு முழுவதும் 86,415 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

391 பேர் உயிரிழப்பு
ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 391ஆக உயர்ந்துள்ளது. நேற்று 343 பலியான நிலையில் இன்று தொற்று பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்துள்ளது.

1,35,99,96,267
நாடு முழுவதும் இதுவரை 1,35,99,96,267 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் 70,46,805 டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Recommended Video

இந்தியாவில் ஓமிக்ரான்
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 77 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஹைதராபாத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 87 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications