நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம்.. உற்சாகமாக கொண்டாடிய ஐஎன்ஏ டிரஸ்ட்
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த தினம், INA அறக்கட்டளை மற்றும் FICCI ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டன.

நேதாதி சுபாஷ் சந்திரபோஸ், சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறுவது இதன் நோக்கம். இளைஞர்களுக்கு தேசத்தின் மீது நம்பிக்கை, தேசப்பற்று ஏற்படுத்துவது தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது.

ஐஎன்ஏ அமைப்பின், துணை தலைவர் ஜேஎஸ் ராஜ்புத் பேசுகையில், நாட்டு மக்கள் நேதாஜி சுதந்திரத்திற்காற்றிய பங்களிப்பை அறிய வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். நேதாஜியை பற்றி அறிவதுதான், நிஜமான தேசப்பற்று.

நேதாஜி சுதந்திர இயக்கத்தில் செய்த பங்களிப்பு ஒட்டுமொத்த அளவில் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறோம். நேதாஜி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். வாழ்கையில் என்ன நடந்தாலும் சுயநலத்தை தவிர்த்து தேச நலன்தான் முக்கியம் என நிரூபித்தவர் நேதாஜி. யார் நமது வரலாற்றாசிரியர்கள்? அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு ஆதரவாக எழுதுகிறார்கள். அதனால் தான் பல விஷயங்கள் அங்கீகரிக்கப்படாத நிலை உள்ளது. அரசியல் காரணங்களுக்காக வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் பதிவு செய்கிறார்கள் என்றார்.

இன்வெஸ்ட் இந்தியா அமைப்பின், துணைத் தலைவ்ர ஹிண்டால் சென்குப்தா கூறுகையில், சுபாஷ் சந்திர போஸின் 125 வது ஆண்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாமி விவேகானந்தருக்கும், நேதாஜிக்கும் நிறைய கொள்கை தொடர்புகள் உள்ளன. இந்திய வரலாற்றில் இந்த இரண்டு புகழ்பெற்ற நபர்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி நான் பேசினேன். மக்கள் இவர்கள் இருவரையும் விரும்புகிறார்கள். சுபாஷ் சந்திர போஸின் நினைவுகள் இந்தியாவின் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications