வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!
டெல்லி: வங்க கடலில் உருவான ஜாவத் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. தற்போது ஒடிஷா கரையோரம் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு வங்க கரையை அடுத்த 12 மணிநேரத்தில் நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் புயலானது நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிஷாவின் பூரி அருகே நிலை கொண்டுள்ளது.

வலுவிழந்த நிலையில்...
இன்று நண்பகல் மேலும் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரி கடற்கரையை கடக்கும். பின்னர் அது மேலும் வலுவிழந்து அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையை நெருங்கும்.

அதிகனமழை
இதனால் வடக்கு ஒடிஷா, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் இன்று கனமழை முதல் அதிக கனமழை பெய்யும். அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தயார் நிலையில் மேற்கு வங்கம்
ஜாவத் புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா, மெதினிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரும் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர். தற்போது ஒடிஷா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

ஒடிஷாவில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 230 கி.மீ. தொலைவிலும் ஒடிஷாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு- தென்மேற்காக 130 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து தெற்கு தென்மேற்காக 180 கி.மீ. தொலைவிலும் பாரதீப்பில் இருந்து தெற்கு தென்மேற்காக 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. ஒடிஷாவின் கஞ்சம், பூரி, கோர்தா, ஜகத்சிங்பூர், கேந்தராபாரா, கட்டாக் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications