அமைச்சர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.. கேபினெட் கூட்டத்தில் "அழுத்தமாக" சொன்ன மோடி
டெல்லி: கொரோனா விஷயத்தில் பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர்களிடம் மோடி இதை வலியுறுத்திக் கூறியுள்ளார் .
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை அமைச்சர்களிடம் வலியுறுத்திய மோடி, தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அடிக்கல் திட்டங்கள்
ஏற்கனவே அடிக்கல் நாட்டி கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அப்போது பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ளதால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உரிய புள்ளி விவரங்களை தயார் செய்துகொண்டு நாடாளுமன்றம் வரும்படி அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என்று பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது அலையை தடுக்கலாம்
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றினால், அனைவரும் விழிப்புடன் இருந்தால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

தடுப்பூசிக்கு உத்வேகம்
தடுப்பூசி போட உரிய சூழலை உருவாக்க வேண்டும். இந்த காலக்கெடுவை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

3 மணி நேர கூட்டம்
நேற்றைய கூட்டம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் விகே பால் இந்தியாவில் தற்போது கொரோனா நோய் பரவல் எப்படி இருக்கிறது, எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications