இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்ட WHO.. உயர்மட்ட அளவில் பிரச்சினையை எடுத்துச் சென்ற இந்தியா
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் தளத்தில் இந்திய வரைபடத்தைத் தவறாகக் குறிப்பிட்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாட்டிலும் தற்போது வைரஸ் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை விளக்கி உலக சுகாதார அமைப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு தொடர்பான மேப் வடிவில் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அப்படி வெளியிட்டுள்ள வரைபடம் தான் சர்ச்சையில் சிக்கியது.

உலக சுகதார அமைப்பு
அதாவது இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியை ஒரே நிறத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக வெவ்வேறு நிறங்களில் குறிப்பிட்டிருந்தது. அதாவது பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் வித்தியமான நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் கடந்த ஜன. 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்

கேள்வி
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதாவது உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை வித்தியமான நிறத்தில் குறிப்பிட்டது தொடர்பாக இந்திய அரசு எதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று ஜோதிராதித்ய சிந்தியா கேள்வி எழுப்பினார்.

கடும் அதிருப்தி
அதற்கு உள் துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில் முரளீதரன், "உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரிப்பது தொடர்பான பிரச்சினை குறித்து உலக சுகாதார அமைப்பின் உயர்மட்டத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தங்கள் தளத்தில் உள்ள நாடுகளின் எல்லைகள் சட்டப்பூர்வமானது இல்லை.

நடவடிக்கை
அவை தோராயமான எல்லைக் கோடுகளைக் குறிக்கின்றன என்று விளக்கத்தை தங்கள் தளத்தில் சேர்த்துக் கொள்வதாக ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்திற்கு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது இருப்பினும் எல்லைகளைச் சரியான முறையில் சித்தரிப்பது குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications