என்னங்க இது? வானில் பயணித்த ஒளி வெள்ளம்.. விண்கற்கள் பொழிவு என பரவிய தகவலால் மக்கள் பீதி.!
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் வானத்தில் மிக வேகமாக பயணித்த ஒளி வெள்ளத்தின் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தாலும் விண்கற்கள் விழுவதாக பரவிய தகவலால் மக்கள் பீதி அடைந்தனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்து இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
விண்ணில் விண்கற்கள் பயணிக்கும் போது பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கம். மிகவும் அற்புதமான இந்த காட்சிகள் பெரும்பாலும் கேமராவில் சிக்குவது கிடையாது.

ஷூட்டிங் ஸ்டார்ஸ் விண்கல்
'ஷூட்டிங் ஸ்டார்ஸ்' என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறை போன்றபொருட்களாகும். அவை பூமியின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய வேகத்தில் நுழைகின்றன. விண்வெளியில் ஒரு தூசி நிறைந்த பகுதியைக் கடக்கும்போது அதிவேகமாக அதாவது வினாடிக்கு 30 முதல் 60 கிமீ வேகத்தில் நுழைகின்றன.

விண்கல் மழை
அப்போது விண்கல் மழை என்று அழைக்கப்படும் ஒளிக் கோடுகளை உருவாக்குகின்றன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு மக்கள் பீதிக்குள்ளாவதற்கு என்ன சம்பந்தம் என கேட்கலாம். நமக்கு இதுகுறித்து தெரியாவிட்டாலும், மகராஷ்டிர மக்கள் கண்டிப்பாக பயந்துதான் ஆக வேண்டும் அதற்கும் காரணம் உண்டு.

லோனார் ஏரி
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய குளம் ஒன்றும் உருவாகியிருக்கிறது. அது மகராஷ்டிர மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் இப்போதல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்

மக்கள் அச்சம்
அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது. இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அதனால் எப்போது விண்கல்லை பார்த்தாலும் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாவதற்கு காரணம் ஆகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications