தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவிக்கான பதிவு மார்ச் வரை செல்லுபடியாகும்: மத்திய அரசு
டெல்லி: தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்காக பெற்றிருந்த பதிவு (Foreign Contribution Regulation Act FCRA- registration) மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, வெளிநாட்டு நிதி உதவி பெற பதிவு செய்திருந்த விண்ணப்பம் அண்மையில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளே முடக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.

மிஷனரிஸ் விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, தங்களது வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என கூறியிருந்தது. மேலும் வெளிநாட்டு நிதி உதவிக்கான பதிவு விவகாரம் முடியும் வரை வங்கி கணக்குகளை நிறுத்தி வைக்கவும் தாங்களே அறிவுறுத்தி இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகம் விளக்கம்
மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்தது. அதில், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010 மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததற்காக மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழான புதுப்பித்தல் விண்ணப்பம் டிசம்பர் 25, 2021 அன்று நிராகரிக்கப்பட்டது. இந்தப் புதுப்பித்தல் மறுப்பை மறு ஆய்வு செய்ய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி இடமிருந்து கோரிக்கை அல்லது சீராய்வு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதுவரை செல்லும்?
மேலும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு எண் 147120001-ல் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பதிவு செய்யப்பட்டது, அக்டோபர் 31, 2021 வரை அதன் பதிவு செல்லத்தக்கதாக இருந்தது. பின்னர், புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் உள்ள பிற வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் சங்கங்களுடன் சேர்த்து டிசம்பர் 31, 2021 வரை இதன் பதிவு நீட்டிக்கப்பட்டது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் இந்த பதிவு செல்லுபடியாகும் காலத்தை மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் அவகாசம்
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில், பொதுமக்களின் நலன் கருதி வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிவு சான்றிதழ்கள் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை செல்லுபடியானதாகும்என்று தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications