75வது சுதந்திர தினம்..பிரதமர் மோடியால் அதிகரித்த தேசியக்கொடி விற்பனை.. பூரிப்பில் வியாபாரிகள்!
டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‛ஹர் கர் திரங்கா' பிரசாரத்தால் வழக்கத்தை விட அதிகளவில் தேசியக்கொடி விற்பனையாகி வருகிறது. கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் தேசியக்கொடி விற்கும் வியாபாரிகள் பூரிப்பில் உள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டாக 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் பிரசாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகரித்த தேசியக்கொடி விற்பனை
மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் பாஜகவினர் தேசியக்கொடி ஏந்தி பைக் ஊர்வலம் மற்றும் நடந்து பேரணி சென்று வருகின்றனர். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுக்கூறி அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் தற்போது தேசியக்கொடியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் தேசியக்கொடி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் தேசியக்கொடி உற்பத்தி செய்யும் தொழிலாளிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகி்ச்சியடைந்துள்ளது.

பெங்களூர் வியாபாரி
இதுபற்றி பெங்களூருவை சேர்ந்த கடைக்காரர் ஒருவர் கூறுகையில், ‛பிரதமர் மோடி அறிவித்த 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தால் தேசியக்கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான தேசியக்கொடியை நாங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஆண்டுகளில் இதேபோன்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்'' என கூறியுள்ளார்.

கொல்கத்தா வியாபாரி
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா வியாபாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஹர் கர் திரங்கா பிரசாரத்தால் தேசியக்கொடி விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளல் தயாரிப்பும் உயர்ந்துள்ளது. மேலும் காதி, சில்க் மட்டுமின்றி பிற வகையான தேசியக்கொடியும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்'' என்றார். இன்னொரு வியாபாரி கூறுகையில், ‛‛எங்கள் கடைக்கு ஏராளமான அப்பார்ட்மென்ட்களில் இருந்து தேசியக்கொடி கேட்டு ஆர்டர் குவிந்துள்ளது. தற்போது தேசியக்கொடி தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நான் பல ஆண்டுகளாக தேசியக்கொடி விற்பனை செய்து வந்தாலும் கூட இந்த ஆண்டு தான் மக்கள் அதிகளவில் தேசியக்கொடியை வாங்குகின்றனர்'' என்றார்.

திருவனந்தபுரம் வியாபாரி
இதுபற்றி திருவனந்தபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக்கொடிக்கான தேவை அதிிகரித்துள்ளது. ஹர் கர் திரங்கா பிரசாரம் அறிவிப்பின் காரணமாக மக்கள் ஏராளமானவர்கள் தேசியக்கொடியை வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளனர்'' என்றார்.

தபால் நிலையத்தில் விற்பனை
மேலும் தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் தபால் துறையில் உதவி இயக்குனராக உள்ள ஆர்எஸ் சர்மா கூறுகையில், ‛‛ஹர் கர் திரங்கா பிரசாரத்தால் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை என்பது இது தான் முதல் முறையாகும்'' என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications