பாஜக, காங்... அனைத்து கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியாக விரும்பும் சரத்பவார்- பம்பரமாய் சுழலும் பி.கே.?
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அடுத்த ஜனாதிபதியாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி குடும்பத்துடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்கின்றன தகவல்கள்.
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத்பவார்.
சரத்பவாரைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கிறார். மகாராஷ்டிராவிலும் பாஜகவுக்கு எதிராக சிவேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆட்சியில் இருக்கிறது.

அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு
அதேநேரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சரத்பவார் சந்தித்தார் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது என பூடகமாக கூறினார். ஆனால் சரத்பவார் இதுபற்றி பேசுவதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பி.கே. ஆலோசனை- எதிர்க்கட்சிகள் கூட்டம்
இதன்பின்னர் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் சலசலப்புகள் இடைவிடாமல் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒருகட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர் திடீரென சரத்பவாரை 2 முறை சந்தித்தார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் சரத்பவார், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி பரபரப்பை கிளப்பினார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை ஒதுக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

சோனியா குடும்பத்துடன் பி.கே. ஆலோசனை
இந்த சூழலில் சோனியா காந்தி குடும்பத்தை பிரசாந்த் கிஷோர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு பஞ்சாப், உ,.பி. சட்டசபை தேர்தல் வியூகத்துக்கானதுதான் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் சரத்பவார், ஜனாதிபதியாவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத்பவாரின் திட்டம் இதுதானா?
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தாம் ஜனாதிபதியாக வேண்டும் என விரும்புகிறாராம் சரத்பவார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து காய்களை நகர்த்தினாராம் சரத்பவார். இதன் தொடர்ச்சிதான் சோனியா குடும்பத்துடனான பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications