பாஜக, காங்... அனைத்து கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியாக விரும்பும் சரத்பவார்- பம்பரமாய் சுழலும் பி.கே.?
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அடுத்த ஜனாதிபதியாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி குடும்பத்துடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்கின்றன தகவல்கள்.
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத்பவார்.
சரத்பவாரைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கிறார். மகாராஷ்டிராவிலும் பாஜகவுக்கு எதிராக சிவேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆட்சியில் இருக்கிறது.

அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு
அதேநேரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சரத்பவார் சந்தித்தார் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது என பூடகமாக கூறினார். ஆனால் சரத்பவார் இதுபற்றி பேசுவதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பி.கே. ஆலோசனை- எதிர்க்கட்சிகள் கூட்டம்
இதன்பின்னர் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் சலசலப்புகள் இடைவிடாமல் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒருகட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர் திடீரென சரத்பவாரை 2 முறை சந்தித்தார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் சரத்பவார், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி பரபரப்பை கிளப்பினார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை ஒதுக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

சோனியா குடும்பத்துடன் பி.கே. ஆலோசனை
இந்த சூழலில் சோனியா காந்தி குடும்பத்தை பிரசாந்த் கிஷோர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு பஞ்சாப், உ,.பி. சட்டசபை தேர்தல் வியூகத்துக்கானதுதான் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் சரத்பவார், ஜனாதிபதியாவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத்பவாரின் திட்டம் இதுதானா?
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தாம் ஜனாதிபதியாக வேண்டும் என விரும்புகிறாராம் சரத்பவார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து காய்களை நகர்த்தினாராம் சரத்பவார். இதன் தொடர்ச்சிதான் சோனியா குடும்பத்துடனான பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications