இந்தியாவில் அதிக தற்கொலை.. தமிழ்நாட்டுக்கு 2வது இடம்.. எவ்வளவு பேர் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் 2021ம் ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் அதிக பேர் தற்கொலை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான விபரங்களை மாநிலம் வாரியாக தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2021-2022ம் ஆண்டுக்கான விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2020-2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021-2022ம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிக தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்கொலை எவ்வளவு?
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின்படி இந்தியாவில் கடந்த 2021-2022 ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த 2020-21ம் ஆண்டை ஒப்பிடும்போது 7.2 சதவீதம் அதிகமாகும். ஏனென்றால் 2020-21ல் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு 2வது இடம்
மாநிலங்களை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 22 ஆயிரத்து 207 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 13.5 சதவீதமாகும். இதற்கு அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 11.5 சதவீதமாகும். தமிழ்நாட்டை தொடர்ந்து 14 ஆயிரத்து 965 தற்கொலைகளுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்தில் உள்ளது. 13 ஆயிரத்து 500 தற்கொலைகளுடன் 4வது இடத்தில் மேற்கு வங்கமும், 13 ஆயிரத்து 56 தற்கொலைகளுடன் 5வது இடத்தில் கர்நாடகா உள்ளது.

உத்தர பிரதேசத்தில் குறைவு
இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் இந்த 5 மாநிலங்களில் மட்டும் தான் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன. மற்ற 23 மாநிலங்களில் 49.6 சதவீத தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் வெறும் 3.5 சதவீத தற்கொலை பதிவாகி உள்ளது.

புதுச்சேரிக்கு 2வது இடம்
தற்கொலையில் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன.டெல்லியில் மொத்தம் 2,810 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் புதுச்சேரியில் 504 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகளுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை, பணப்பிரச்சனை, தனிமை, மனஅழுத்தம் உள்பட வெவ்வேறு காரணங்களால் ஒருவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.
-
அமராவதியில் 350 பிரைவேட் வீடியோக்கள்.. தோண்ட தோண்ட வெளிவந்த பூதம்.. புதிய ட்விஸ்ட் -
"மதம் மாறினால் பதவி உயர்வு!" நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு கொடுமை.. அமைச்சர் ஆவேசம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்











Click it and Unblock the Notifications