Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் அதிக தற்கொலை.. தமிழ்நாட்டுக்கு 2வது இடம்.. எவ்வளவு பேர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 2021ம் ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் அதிக பேர் தற்கொலை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான விபரங்களை மாநிலம் வாரியாக தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2021-2022ம் ஆண்டுக்கான விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 2020-2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021-2022ம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிக தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்கொலை எவ்வளவு?

இந்தியாவில் தற்கொலை எவ்வளவு?

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின்படி இந்தியாவில் கடந்த 2021-2022 ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த 2020-21ம் ஆண்டை ஒப்பிடும்போது 7.2 சதவீதம் அதிகமாகும். ஏனென்றால் 2020-21ல் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு 2வது இடம்

தமிழ்நாடு 2வது இடம்

மாநிலங்களை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 22 ஆயிரத்து 207 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 13.5 சதவீதமாகும். இதற்கு அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 11.5 சதவீதமாகும். தமிழ்நாட்டை தொடர்ந்து 14 ஆயிரத்து 965 தற்கொலைகளுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்தில் உள்ளது. 13 ஆயிரத்து 500 தற்கொலைகளுடன் 4வது இடத்தில் மேற்கு வங்கமும், 13 ஆயிரத்து 56 தற்கொலைகளுடன் 5வது இடத்தில் கர்நாடகா உள்ளது.

உத்தர பிரதேசத்தில் குறைவு

உத்தர பிரதேசத்தில் குறைவு


இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் இந்த 5 மாநிலங்களில் மட்டும் தான் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன. மற்ற 23 மாநிலங்களில் 49.6 சதவீத தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் வெறும் 3.5 சதவீத தற்கொலை பதிவாகி உள்ளது.

புதுச்சேரிக்கு 2வது இடம்

புதுச்சேரிக்கு 2வது இடம்

தற்கொலையில் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன.டெல்லியில் மொத்தம் 2,810 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் புதுச்சேரியில் 504 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகளுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை, பணப்பிரச்சனை, தனிமை, மனஅழுத்தம் உள்பட வெவ்வேறு காரணங்களால் ஒருவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+