கொரோனா:ஆக்ஸிஜன் சிகிச்சைக்கும், கறுப்பு பூஞ்சைக்கும் தொடர்பில்லை: எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா
டெல்லி: கொரோனாவுக்கான ஆக்சிஜன் சிகிச்சைக்கும் கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை; மியூகோர்மைகோசிஸ் பற்றி பேசும்போது, கறுப்பு பூஞ்சை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மியூகோர்மைகோசிஸ் பற்றி பேசும்போது, கறுப்பு பூஞ்சை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இதன் மூலம் பல குழப்பங்களை தவிர்க்க முடியும்.

கறுப்பு பூஞ்சை பெயர் ஏன்?
கறுப்பு பூஞ்சை என்பது மற்றொரு வகையைச் சேர்ந்தது. வெள்ளை பூஞ்சை பகுதியில், கரும்புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக, மியூகோர்மைகோசிஸ் கருப்பு பூஞ்சையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கேண்டிடா என்ற பூஞ்சை தொற்று வாய், வாயின் உட்பகுதி மற்றும் நாக்கில் வெள்ளை திட்டுகளாக காணப்படும். பிறப்புறப்புகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

மியூகோர்மைகோசிஸ்
பாதிப்பு மோசமானால் ரத்தத்தில் காணப்படும். அரிதாக ஏற்படும் அஸ்பெர்கிலோசிஸ், நுரையீரலுக்குள் ஊடுருவி குழியை ஏற்படுத்தும். ஆனால் கொரோனா பாதித்தவர்களுக்கு பெரும்பாலும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்புதான் ஏற்படுகிறது. அஸ்பெர்கிலோசிஸ் அரிதாக காணப்படுகிறது. சிலருக்கு கேண்டிடா ஏற்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு, ஸ்டீராய்டு மருந்து
மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடையவர்கள் அல்லது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்கள். மற்வர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 'ஆக்ஸிஜன் சிகிச்சை எடுக்காமல், வீட்டில் சிகிச்சை பெற்ற பலருக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆக்ஸிஜன் சிகிச்சைக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கும் உறுதியான தொடர்பு இல்லை.

ஆக்சிஜன் செறிவூட்டிகளில் ஈரப்பதம்
நீரிழிவு நோயாளிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் முறையான சுகாதாரத்தை பின்பற்றுவது மிக முக்கியம். ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்துபவர்கள், ஈரப்பதமூட்டிகள் சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications